×

சிறுவாபுரி முருகன் கோயிலில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்

பெரியபாளையம், ஜன.24: சிறுவாபுரி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2 மணி காத்திருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் தை மாத செவ்வாய்க் கிழமையான நேற்று சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பொது தரிசனம், கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று ஒரேநாளில் சிறுவாபுரி முருகன் கோயிலில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

The post சிறுவாபுரி முருகன் கோயிலில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Sami ,Siruvapuri Murugan Temple ,Periyapalayam ,Balasubramanya Swamy Temple ,Siruvapuri ,Periyapalayam, Thiruvallur District ,Lord ,Swamy ,
× RELATED நத்தம் அருகே கோயில் திருவிழாவில் எருது ஓட்டம் நிகழ்ச்சி