×

வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மேலும் 2 கென்யா பெண்கள் மீட்பு: முக்கிய குற்றவாளிக்கு வலை

சென்னை, ஜன.23: இந்தியாவில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை என அழைத்து வந்து சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மேலும் 2 கென்ய நாட்டு இளம் பெண்களை போலீசார் மீட்டனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை பிடிக்க உதவி கமிஷனர் துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் கடந்த 19ம் தேதி சுற்றித்திரிந்த வெளிநாட்டு இளம்பெண் ஒருவரை கோயம்பேடு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கென்யா நாட்டை சேர்ந்த கரோலின் நபுலா (30) என்றும், இவரை, சக நாட்டை சேர்ந்த கனாட்டா என்பவர், இந்தியாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து, சென்னை கீழ்ப்பாக்கத்தில் தங்க வைத்து, மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், அவரிடம் இருந்து தப்பி தனது சொந்த நாட்டிற்கு செல்ல கோயம்பேடு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மீட்கப்பட்ட கென்யா நாட்டு இளம்பெண்ணை கோயம்பேடு போலீசார் கீழ்ப்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி உத்தரவுப்படி உதவி கமிஷனர் துரை தலைமையில் உதவி ஆய்வாளர் சோனியா, பாதிக்கப்பட்ட கென்யா நாட்டு பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தன்னை போன்று மேலும் 2 கென்யா நாட்டு இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக தெரிவித்தார்.

அதன்பேரில், உதவி ஆய்வாளர் சோனியா தலைமையிலான போலீசார், கீழ்ப்பாக்கம் தியாகப்பா சாலையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கென்யா நாட்டை சேர்ந்த கவுடென்சியா வசிமியா (21) மற்றும் ஜானி வெரிமு மைனா (27) ஆகியோரை மீட்டு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தங்கும் விடுதியில் தங்க வைத்தனர். மீட்கப்பட்ட 3 ெகன்யா நாட்டு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய முக்கிய குற்றவாளியான கனாட்டா தற்போது தலைமறைவாக உள்ளார். எனவே அவனை பிடிக்க உதவி கமிஷனர் துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மீட்கப்பட்டுள்ள 3 கென்யா நாட்டு இளம் பெண்கள் குறித்து முறைப்படி சென்னை மாநகர காவல்துறை கென்யா நாட்டு தூதரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து, சென்னை கீழ்ப்பாக்கத்தில் தங்க வைத்து, மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

The post வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மேலும் 2 கென்யா பெண்கள் மீட்பு: முக்கிய குற்றவாளிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,India ,Assistant Commissioner ,Durai ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்