×

டூவீலர்கள் விபத்தில் 3 பேர் காயம்

காரியாபட்டி, ஜன. 21: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்லுப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (48). இவர் காரியாபட்டியில் ஜேஜே காலனி எதிரில் பலசரக்கு வாங்கிக் கொண்டு தனது டூவீலரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காரியாபட்டியை சேர்ந்த வைரவகுமார் (24) ராம்குமார் (24) இருவரும் வந்த டூவீலரும், முருகன் ஓட்டி வந்த டூவீலரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முருகன், வைரவகுமார், ராம்குமார் ஆகிய மூன்று பேரும் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்

The post டூவீலர்கள் விபத்தில் 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Kariyapatti ,Murugan ,Kallupatti ,Gariyapatti ,Virudhunagar district ,JJ Colony ,Vairavakumar ,Dinakaran ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்