×

ஜெயங்கொண்டத்தில் ₹91 லட்சத்தில் புதிய கிளை நூலகம் கட்டும் பணி

ஜெயங்கொண்டம்,ஜன.21: ஜெயங்கொண்டத்தில் புதிய கிளை நூலக கட்டுமானப் பணியை ஜெயங்கொண்டம் கசொக கண்ணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நீண்ட காலமாக ஜெயங்கொண்டத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நூலகத்திற்கு புதிதாக சொந்தமான கட்டிடமாக ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்தை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கசொக கண்ணன் துவக்கி வைத்தார். விழாவில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அசோக்குமார், மேலாளர் அன்புச்செல்வி, நகர் மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், துணைத் தலைவர் வெ.கொ கருணாநிதி, மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள், பொதுப்பணித்துறை பொறியாளர் ஜெயந்தி, ஜெயங்கொண்டம் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர திமுக நிர்வாகிகள், வார்டு திமுக செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post ஜெயங்கொண்டத்தில் ₹91 லட்சத்தில் புதிய கிளை நூலகம் கட்டும் பணி appeared first on Dinakaran.

Tags : Jayangonda ,Jayangondam ,Kasoka Kannan ,MLA ,Jayangkonda ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...