×

வீட்டின் கதவை உடைத்து 7 பவுன், ₹25 ஆயிரம் கொள்ளை

செஞ்சி, ஜன. 21: செஞ்சி அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 7 பவுன், 25 ஆயிரம் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செஞ்சி அருகே உள்ள ஊரணி தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். செஞ்சி அருகே உள்ள குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் நேற்று சென்றுள்ளார். திரும்பி மாலை வந்து வீட்டை பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ஏழு பவுன், 25 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து செஞ்சி போலீசில் கஜேந்திரன் மனைவி புஷ்பா கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். திருடு போன நகையின் மதிப்பு சுமார் மூன்று லட்சம் ஆகும்.

The post வீட்டின் கதவை உடைத்து 7 பவுன், ₹25 ஆயிரம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Senchi ,Urini Dhangal ,Senchi… ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது...