×

திருமணம் நடக்கவிருந்த இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை வந்தவாசி அருகே நாளை

வந்தவாசி, ஜன.20: வந்தவாசி அருகே நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம்பெண் திடீரென மாயமானார். அவர் கடத்தி செல்லப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். அஞ்சல் வழியில் பி.ஏ. படித்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த உறவினர் ஒருவருக்கும் நாளை (21ம் தேதி) திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகைக்காக பொருட்களை வாங்க இளம்பெண்ணின் பெற்றோர் வந்தவாசிக்கு சென்றிருந்தனர். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த இளம்பெண்ணை காணவில்லையாம். உறவினர்கள், தெரிந்தவர்கள் என பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, இளம்பெண்ணின் தாய் வந்தவாசி வடக்கு போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண் என்ன ஆனார். அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

The post திருமணம் நடக்கவிருந்த இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை வந்தவாசி அருகே நாளை appeared first on Dinakaran.

Tags : Wasi ,Vandavasi ,Tiruvannamalai district ,Dinakaran ,Vasi ,
× RELATED (தி.மலை) கர்ப்பமாக்கி கடத்திய நெல்...