×

நண்பர்களுடன் சென்ற பள்ளி டிரைவர் மாயம்

போச்சம்பள்ளி, ஜன.19: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகில் உள்ள செட்டியூரைச் சேர்ந்தவர் பெருமாள்(30). இவர் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில், வாகன டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மோனிகா(25) என்ற மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், பொங்கல் விடுமுறையின் போது வீட்டில் இருந்த பெருமாளை, கடந்த 15ம்தேதி இரவு, சிலர் வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது, மோனிகா, இதுவரை நான் இவர்களை பார்த்ததே இல்லையே என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் என் நண்பர்கள்தான் என கூறிய பெருமாள் அவர்களுடன் வெளியே சென்றுள்ளார்.

அதன் பின்னர், 4 நாட்கள் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததால், மோனிகா போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவை பரிசோதனை செய்தனர். அதில் பெருமாள் சென்ற போது இரவு நேரம் மற்றும் பனிமூட்டம் என்பதால், பதிவுகள் சரியாக தெரியவில்லை. இதையடுத்து பர்கூர் டிஎஸ்பி மனோகரன் தலைமையில் தனிப்படை அமைத்து, பெருமாளை போலீசார் தேடி வருகின்றனர். அவர் கடத்திr; செல்லப்பட்டாரா?, அல்லது வெளியில் சென்றவர்கள் வரவில்லையா என்ற கோணங்களில் ேபாலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அவருடன் பணியாற்றுபவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post நண்பர்களுடன் சென்ற பள்ளி டிரைவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Bochambally ,Perumal ,Chettiur ,Bochambally, Krishnagiri district ,Pochampally ,Monica ,Pongal ,
× RELATED தனியார் நிறுவன ஊழியர் மாயம்