×

டேம் காவலாளியை தாக்கியவருக்கு வலை

விருதுநகர், ஜன.19: டேம் காவலாளியை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் அருகே கூரைக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(57). இவர் குல்லூர்சந்தை அணையின் வாட்ச்மேனாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடித்து கூரைக்குண்டு காளியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, கூரைக்குண்டை சேர்ந்த கணேசன் அவதூறாக திட்டி, கம்பால் தாக்கி காயப்படுத்தி உள்ளார். காயமடைந்த மாரியப்பன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டார். அவர் சூலக்கரை போலீசில் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து கணேசனை தேடி வருகின்றனர்.

The post டேம் காவலாளியை தாக்கியவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Mariyappan ,Thakurkundu ,Kullurchandhai Dam ,Kaliyamman temple ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...