×

இந்தியாவில் 375 பேருக்கு கொரோனா பாதிப்பு: கர்நாடகாவில் 2 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக 375 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 3,075 ஆக உயர்ந்துள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவை சேர்ந்த 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,33,414, ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 4.4 கோடி பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது என்று ஒன்றிய சுகாதார அமைச்சக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post இந்தியாவில் 375 பேருக்கு கொரோனா பாதிப்பு: கர்நாடகாவில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : New Delhi ,India ,Karnataka ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி