×

கன்னியாகுமரி அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

கன்னியாகுமரி, ஜன.14: கன்னியாகுமரி கொட்டாரம் அருகே உள்ள லெட்சுமிபுரம் பாலகிருஷ்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் எழில். சமையல் தொழிலாளி. இவரது மகன் மதன் ஜோஸ் (18). இவர் தனது தந்தையுடன் சமையல் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை 5 மணியளவில் லட்சுமிபுரம் குளத்தின் அருகில் உள்ள நிலத்தில் மதன் ஜோஸ் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பக்கத்தினர் அவரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் மதன் ஜோஸ் இறந்தது தெரிய வந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. காதல் பிரச்சினையில் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post கன்னியாகுமரி அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Eghil ,Letsumipuram Balakrishnan Nagar ,Kanyakumari Kottaram ,Madan Jose ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...