×

வேன்கள் மோதி விபத்து; மபி மாநில 2 பெண்கள் உட்பட3 பேர் பலி: 30 பேர் படுகாயம்

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே 2 வேன்கள் மோதிய விபத்தில் மபி மாநில பெண்கள் 3 பேர் பலியாகினர். 30 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் நேற்று ராமேஸ்வரம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் வேனில் தனுஷ்கோடியை சுற்றி பார்க்க சென்றனர். ராமேஸ்வரம் தனுஷ்கோடி – தேசிய நெடுஞ்சாலையில் கோதண்டராமர் கோயில் அருகே அரசு‌ பேருந்தை வேன் முந்த முயன்றது.‌ அப்போது எதிரே வந்த வேனில் பயங்கரமாக மோதியது. இதில் வேன் கவிழ்ந்து பலத்த சேதம் அடைந்தது. மேலும், வேனில் இருந்த மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் பலர் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினர் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், செல்லும் வழியில் மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜையினி பகுதியை சேர்ந்த மனுபாய்(42), நாதன் பாய்(70), கிரிதாரி (70) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அதே மாநிலத்தைச் சேர்ந்த ராம்லால்(24), பண்ணாலால்(65), கத்தோரி(70), சாந்தா(60), ஜெகநாத்(69) உள்ளிட்ட 30 பேர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 13 பேர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக வேன் ஒட்டுநர்‌களான உச்சிப்புளியை சேர்ந்த முரளி, ராமேஸ்வரத்தை சேர்ந்த இருவர் மீதும் தனுஷ்கோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேன்கள் மோதி விபத்து; மபி மாநில 2 பெண்கள் உட்பட3 பேர் பலி: 30 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : collision accident ,Mabi state ,Rameswaram ,Mabi ,Dhanushkodi ,Madhya Pradesh ,Swami ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...