சென்னை: பெரியார், அம்பேத்கர் ஆகியோர் பெயரில் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூகநீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்யும் வகையில், சமூக நீதிக்கான ‘தந்தை பெரியார் விருதினை’ வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், 2023ம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான ‘தந்தை பெரியார் விருது’க்கு சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் சுப.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023ம் ஆண்டிற்கான ‘டாக்டர் அம்பேத்கர் விருது’க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார். விருது தொகையாக ரூ.5 லட்சம், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும்.
The post 2023ம் ஆண்டிற்கான பெரியார், அம்பேத்கர் பெயரில் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார் appeared first on Dinakaran.