×

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

 

சிவகங்கை, ஜன.12: சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் தெரிவித்ததாவது:சிவகங்கை அருகே படமாத்தூர் சக்தி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கு கொடுத்த விவசாயிகள் ஊக்கத்தொகை வழங்குவது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு நடப்பு 2023-2024ம் ஆண்டிற்கான ஊக்கத்தொகையாக டன் ஒன்றிருக்கு ரூ.195வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் 203118.540 மெ.டன் கரும்பு சப்ளை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2ஆயிரத்து 668 விவசாயிகளுக்கு ரூ.3கோடியே 96லட்சத்து 8ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இத்தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார். உடன் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன் இருந்தார்.

The post கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai District ,Collector ,Asha Ajith ,Patamathur Shakti Sugar Mill ,Tamil Nadu government ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி