×

ஓபிஎஸ் அணியில இருந்து நிறைய கம்பி கட்டுற கதைகளை சொல்லுறாங்க, அதெல்லாம் நடக்காது: ஜெயக்குமார் பேட்டி!

சென்னை: ஓபிஎஸ் அணியில இருந்து நிறைய கம்பி கட்டுற கதைகளை சொல்லுறாங்க, அதெல்லாம் நடக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த ஒபிஎஸ் அணியினருக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பி.எஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்; உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர் ஓ.பி.எஸ். அதிமுகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு, உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தண்டனை வழங்கப்படும்.

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவின் நம்பிக்கை துரோகி. நியாயமான ஒரு நல்ல தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கும் ஓபிஎஸ்க்கு தகுந்த தண்டனையை இறைவனே வழங்கியுள்ளார். அதிமுக அலுவலகத்தை தாக்கிய ஓபிஎஸ்க்கு தகுந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

 

The post ஓபிஎஸ் அணியில இருந்து நிறைய கம்பி கட்டுற கதைகளை சொல்லுறாங்க, அதெல்லாம் நடக்காது: ஜெயக்குமார் பேட்டி! appeared first on Dinakaran.

Tags : OPS ,Jayakumar ,CHENNAI ,MINISTER ,Paneer Selvam ,Dinakaran ,
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...