×

ஆப்கானில் குண்டுவெடிப்பு 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் குண்டு வெடித்து மினி வேனில் பயணம் செய்த 3 பேர் பலியாயினர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சிறையில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரு மினி வேனில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, குண்டு வெடித்து அந்த வாகனம் சின்னாபின்னமாகியது. இதில்,3 பேர் பலியாயானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடந்ததற்கு பின் ஐஎஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மினி வேனில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்ததாகவும், இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாயினர். மேலும் சிலர் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் சம்மந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

The post ஆப்கானில் குண்டுவெடிப்பு 3 பேர் பலி, 4 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Afghanistan Kabul ,Afghanistan ,Kabul ,
× RELATED ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை: வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு