×

தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி பலி

ஓட்டப்பிடாரம், ஜன. 9: ஓட்டப்பிடாரத்தை அடுத்த ஓசனூத்து பகுதியைச் சேர்ந்தவர் வேலு (60). சொந்தமாக விவசாயம் செய்து வந்த இவர், நேற்று முன்தினம் மாலையில் மது அருந்திவிட்டு ஓசனூத்தில் இருந்து சபரிமங்கலம் செல்லும் ரோட்டில் குளத்துக்கரையின் பாலத்தில் அமர்ந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி அவர் தண்ணீரில் விழுந்ததில் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உறவினர்கள் தேடிச் சென்று பார்த்தபோது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த ஓட்டப்பிடாரம் போலீசார், வேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Ottapidaram ,Velu ,Osanuthu ,Kulathukkarai ,Osanooth ,Sabarimangalam ,Dinakaran ,
× RELATED ஓட்டப்பிடாரம் அருகே பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம்