×

பில்கிஸ்பானு வழக்கின் தீர்ப்பு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் விடுதலை உத்தரவை ரத்து செய்து, குற்றவாளிகள் சிறைக்கு செல்ல வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதே போல் முன்னேறிய சாதியினரில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்ற தீர்ப்பு வழங்கி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் முன்னேறி சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்காது என்ற எடுத்த கொள்கை முடிவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழிவகை செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நீதி, சமூக நீதி காக்கும் இரண்டு தீர்ப்புகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு வரவேற்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பில்கிஸ்பானு வழக்கின் தீர்ப்பு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Bilgispanu ,Indian Communists ,CHENNAI ,Communist ,State Secretary ,Mutharasan ,Supreme Court ,Bilgis Bhanu ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...