×

எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது?: தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்

சென்னை: சென்னையில் மிக கனமழைக்கான வாய்ப்பு இல்லை என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். தெற்கு சென்னையின் புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

கனமழை குறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;

▪ இதுவரை மிதமான மழைதான் பெய்து வந்தது. தற்போதுதான் மழை மேகங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து வருகின்றன. அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்யக்கூடும்.

▪ நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

▪ சென்னையில் இதுவரை 50 முதல் 70 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.

▪ தென் சென்னையின் சில பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

▪ சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான வாய்ப்புகள் இல்லை.

▪ விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடர்ந்த மேகங்கள் இருப்பதால், அடுத்த சில மணி நேரங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

The post எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது?: தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pradeep John ,Chennai ,southern Chennai ,Chengalpattu ,Ranipetta ,Cuddalore ,Kallakurichi ,
× RELATED சென்னை மீனம்பாக்கத்தில் இன்று 105.8°F வெப்பநிலை பதிவாக வாய்ப்பு