×

ராகி கொள்முதலுக்கு ஏற்பாடு

தேன்கனிக்கோட்டை, ஜன.8: போடிசிப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ராகி கொள்முதல் நடைபெறுவதால் கெலமங்கலம் பகுதி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வோளாண் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் அருகே உள்ள போடிசிப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அரசு நிர்ணயித்த விலையான கிலோ ₹38.46க்கு ராகி கொள்முதல் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் பெயன்பெற விவசாயிகள் தங்களின் நிலத்தின் சிட்டா, ஆதார் கார்டு, வங்கி புத்ததக நகல், ராகி பயிர் செய்யப்பட்டதற்கான கிராம நிர்வாக அலுவலரின் கையொப்பம் பெற்ற நிலத்தின் அடங்கல் மற்றும் சுத்தம் செய்யப்பட்ட ஒரு கிலோ ராகி எடுத்துக் சென்று தங்களுடைய பெயரை பதிவு செய்து, கூட்டுறவு சொசைட்டி மூலம் விற்பனை செய்து நல்ல லாபம் பெற விவசாயிகளை வேளாண்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post ராகி கொள்முதலுக்கு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Kelamangalam ,Dinakaran ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு