×

மதுரை கொடிக்குளம் அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்பு இடம் தானம்

மதுரை, ஜன. 6: மதுரையை அடுத்த கொடிக்குளம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக அப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் மதுரை கோ.புதூர் சர்வேர் காலனி கங்கை தெருவை சேர்ந்தவர் உக்கிரபாண்டியன் மனைவி ஆயிஅம்மாள் என்ற பூரணம்.

இவர் தனக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் 52 சென்ட் நிலத்தை கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி கட்டடம் கட்டுவதற்காக தானமாக நேற்று பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். அவரின் இச்சேவைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

The post மதுரை கொடிக்குளம் அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்பு இடம் தானம் appeared first on Dinakaran.

Tags : Madurai Kodikulam Government School ,Madurai ,Government Panchayat Union Middle School ,Kodikulam ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...