×

தொழிற்சங்கத்தினர் வாயிற்கூட்டம்

தர்மபுரி, ஜன.5: தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக, அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று பாரதிபுரம் தலைமை அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பு, வேலை நிறுத்த போராட்டத்திற்கான விளக்க வாயிற்கூட்டம் நடந்தது. சிஐடியூ மண்டல தலைவர் முரளி தலைமை வகித்தார். கூட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு ஒப்பந்த பலன், அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும். 1.4.2003க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியின் போது இறந்தவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு, வேலை வழங்க வேண்டும். போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இதில், சிஐடியூ மாநில செயலாளர் நாகராஜன், சண்முகம், ரவி, தங்கவேல், ஒருக்காமலை, பத்மநாபன், மணி, குப்புசாமி, விஸ்வநாதன், அருள்மொழி, நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தொழிற்சங்கத்தினர் வாயிற்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri Zone Government Transport Corporation ,Federation of All Trade Unions ,Retired Parents Welfare Associations ,Bharathipuram Chief Government Transport Office ,CITU… ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி