×

விளாத்திகுளம் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு

விளாத்திகுளம், ஜன. 4: விளாத்திகுளம் அரசு கல்லூரியில் நான் முதல்வன் நிரல் திருவிழா தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. விளாத்திகுளம் சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம் இணைந்து நடத்தும் நான் முதல்வன் நிரல் திருவிழா தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை பேராசிரியர் சுபா வரவேற்றார். கணினி அறிவியல் துறை பேராசிரியர் அருள்கணேஷ், நான் முதல்வன் நிரல் திருவிழா பற்றியும், வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் சசிதரன், தொழில் முனைவோர் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்தும் பேசினர். ஆங்கில பேராசிரியர் ரம்யா நன்றி கூறினார்.

The post விளாத்திகுளம் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு appeared first on Dinakaran.

Tags : Vlathikulam College ,Vlathikulam ,Vlathikulam Government College ,Nan Multuvan Program Festival ,Tamil Nadu Skill Development Corporation ,Entrepreneurship Development Innovation ,Subramania Swami Arts and Science College ,Seminar ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி எனது 2வது தாய் வீடு