×

குடும்ப பிரச்னையில் பெண் தீக்குளிப்பு

திருவெண்ணெய்நல்லூர், ஜன. 4: திருவெண்ணெய்நல்லூர் அருகே மணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அம்பிகா (30). மணிகண்டன் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இருவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஜெசிகா (7) என்ற மகளும், தருண் (4) என்ற மகனும் உள்ளனர். மணிகண்டன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அம்பிகா தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனடியாக மணிகண்டன் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தீக்காயங்களுடன் முண்டிம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post குடும்ப பிரச்னையில் பெண் தீக்குளிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvenneynallur ,Manikandan ,Manakuppam ,Ambika ,Jessica ,Tarun ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...