×

511 பேருக்கு ஜேஎன்.1 தொற்று

புதுடெல்லி: நாடு முழுவதும் 511 பேர் கொரோனா தொற்றின் துணை திரிபான ஜேஎன்.1. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2ம் தேதி வரை 11 மாநிலங்களில் 511 பேருக்கு ஜேஎன்.1 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கர்நாடகா மாநிலத்தில் 199 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் 148 பேருக்கும், கோவாவில் 47, குஜராத்தில் 36, மகாராஷ்டிராவில் 32, தமிழ்நாட்டில் 26. டெல்லி 16. ராஜஸ்தானில் 4, தெலங்கானா 2, ஒடிசா மற்றும் அரியானாவில் தலா ஒருவர் என மொத்தமாக இதுவரை 511 பேர் ஜேஎன்.1 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 602 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. . தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையானது 4440ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 722 பேர் குணமடைந்துள்ளனர்.

The post 511 பேருக்கு ஜேஎன்.1 தொற்று appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Karnataka ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி