×

கறம்பக்குடி அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது

 

கறம்பக்குடி, ஜன.3: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சின்ராசு. இவரது மனைவி சித்தார்த்தி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் சித்தார்த்திக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது உடனடியாக கறம்பக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார் மேலும் மருத்துவர்கள் அறிவுரையின் படி அப்பெண்ணை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவ மனையில் சேர்ப்பதற்கு முன்பே செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானதுடன் மருத்துவ உதவியாளர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர். புதுக்கோட்டை நெருங்கும் வழியிலேயே 108 ஆம்புலன்சில் அப்பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது தாயும் சேயும் நலமாக உள்ளனர். மருத்துவ உதவியாளர் செல்வராஜ் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஐயப்பன் இருவரும் ராணியார் அரசு மருத்துவ மனையில் அப்பெண்ணை சேர்த்தனர். இருவரையும் உறவினர்கள் பாராட்டினர்.

The post கறம்பக்குடி அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது appeared first on Dinakaran.

Tags : Karambakudi ,Karampakudi ,Sinrasu ,Karambakudi North Street ,Pudukkottai District ,Siddhartha ,MUNDINAM SITHARTHI ,KARAMBAKUDI GOVERNMENT MEDICAL CENTER ,
× RELATED மதுபிரியர்கள் மகிழ்ச்சி...