×

நிதி நிறுவன ஊழியர் மர்ம சாவு

விருத்தாசலம், ஜன. 3: விருத்தாசலம் பனி பூண்டார் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜுலு மகன் ராஜேஷ்குமார்(37). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் சிட்பண்ட்ஸில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கிருபாவதி(31) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 31ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ராமச்சந்திரன் பேட்டையை சேர்ந்த தனது நண்பர் வெங்கடேசன் என்பவருடன் புதுச்சேரிக்கு ராஜேஷ்குமார் சென்றுள்ளார். தொடர்ந்து 1ம் தேதி இரவு 8 மணி அளவில் வெங்கடேசன், தனது பைக்கில் ராஜேஷ்குமாரை கொண்டு வந்து வீட்டில் விட்டு விட்டு சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது கிருபாவதி காய்கறி வாங்க வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது ராஜேஷ்குமார் வீட்டில் உள்ள படிக்கட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து கிருபாவதி, உறவினர்கள் உதவியுடன் ராஜேஷ்குமாரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது, அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிருபாவதி கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நிதி நிறுவன ஊழியர் மர்ம சாவு appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Rajesh Kumar ,Govindarajulu ,Bani Poondar Road ,Neyveli ,Kirubati ,
× RELATED லாரி மோதி வாலிபர் பலி