மவுண்ட் மவுங்கானுய்: வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட டி.20 தொடரில் ஆடியது. இதில் முதல் போட்டியில் வங்கதேசம் வென்ற நிலையில் 2வதுபோட்டி மழையால் கைவிடப்பட்டது. 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி மவுண்ட் மவுங்கானுய் நகரில் இன்று காலை நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த வங்கதேசம் 19.2ஓவரில் 110 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 17, டவ்ஹித் ஹ்ரிடோய் 16 ரன் அடித்தனர்.
நியூசிலாந்து பவுலிங்கில் மிட்செல் சான்ட்னர் 4, சவுத்தி, ஆடம் மில்னே, பென் சியர்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில், ஃபின் ஆலன் 38, ரன் எடுக்க, டிம் சீஃபர்ட், டேரில் மிட்செல், பிலிப்ஸ் ,மார்க் சாப்மேன் ஆகியோர் தலா ஒரு ரன்னில் அவுட் ஆகினர்.
14.4 ஓவரில் நியூசிலாந்து 5விக்கெட் இழப்பிற்கு 95 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் அத்துடன் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டு டக்வொர்த்லீவிஸ் விதிப்படி நியூசிலாந்து 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கேப்டன் மிட்செல் சான்ட்னர் 18, ஜேம்ஸ் நீஷம் 28 ரன்னில் களத்தில் இருந்தனர். 1-1 என தொடர் சமனில் முடிந்த நிலையில் சான்ட்னர் ஆட்டநாயகன் விருதும், வங்கதேச பவுலர் ஷோரிஃபுல் இஸ்லாம் தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.
The post வங்கதேசத்திற்கு எதிராக கடைசி டி.20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி appeared first on Dinakaran.