×

லாரியை முந்த முயன்ற கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

 

ராசிபுரம், டிச.31: ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற கார், தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை(52). நாமக்கலில் உரக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது மனைவியின் தாயாருக்கு நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக, சேலத்தை நோக்கி குடும்பத்தினருடன் காரில் சென்றார். அப்போது, ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பிரிவு சாலையின் அருகே சென்று கொண்டிருந்த போது, தேசிய நெடுஞ்சாலையில் இரு பாதையிலும் லாரி சென்று கொண்டிருந்தது.

இரு லாரிகளுக்கு நடுவே சின்னதுரை காரை இயக்கியுள்ளார். லாரியை முந்திச் சென்ற பிறகு, எதிர்பாராத விதமாக லாரியின் மீது கார் மோதியது. இதில் நெடுஞ்சாலையின் நடுவே, தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி டிரைவர் ராகுல், கார் மீது மோதாமல் இருப்பதற்காக சட்டென்று பிரேக் அடித்ததால், லாரி கார் மீது மோதவில்லை. இதனால், காரில் இருந்த 4 பேரும் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்தில் சிக்கியவர்களை பொதுமக்கள் மீட்டு, ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரை மீட்டு அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post லாரியை முந்த முயன்ற கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Chinnadurai ,Namakkal ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...