×

தூத்துக்குடியில் மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி கனிமொழி எம்பி வழங்கினார்

தூத்துக்குடி, டிச.31: தூத்துக்குடி சுப்பையாபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் வெள்ள நிவாரண நிதியை கனிமொழி எம்.பி. வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகளவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, வைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம் ஆகிய 5 தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் குடும்ப அட்டைக்கு ₹6 ஆயிரமும், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு, எட்டையபுரம் ஆகிய 5 தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் குடும்ப அட்டைக்கு ₹ஆயிரமும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதேநேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் பயிர் சேதங்கள் உள்ளிட்ட மற்ற நிவாரண உதவிகள் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் ஒரேமாதிரியாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி சுப்பையாபுரம் 5வது தெரு பகுதியில் உள்ள ரேசன் கடையில் வெள்ள நிவாரணத் தொகை ₹6ஆயிரத்தை வழங்கும் பணியை கனிமொழி எம்பி., தொடங்கிவைத்தார். இதில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடியில் மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி கனிமொழி எம்பி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Kanimozhi MB ,Tuticorin ,Thoothukudi ,Kanimozhi M. B. ,Tuthukudi ,Vaikundam ,Thiruchendur ,Aral ,Satankulam ,Kanimozhi ,MB ,
× RELATED கோடைவெயில் தாக்கம் எதிரொலி...