×

திருநெல்வேலி ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்

 

ஈரோடு, டிச.29: ஈரோடு திருநெல்வேலி ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர், ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை நேரில் சந்தித்து அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஈரோடு மற்றும் தென் மாவட்ட ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ஈரோடு-திருநெல்வேலி ரயிலை (வண்டி எண்: 16845/16846) திருநெல்வேலியில் இருந்து பத்தமடை, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூர் சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீடித்து இயக்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, ஈரோடு எம்பி அ.கணேச மூர்த்தி, மதிமுக ஈரோடு கிழக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பி.வி.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

The post திருநெல்வேலி ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Sengkot ,Erode ,Secretary General ,Wiko ,Union Railway ,Minister ,Aswin Vaishna ,South ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...