×

டாஸ்மாக் கடையில் மயங்கி விழுந்தவர் சாவு

திருச்சி உய்ய கொண்டான் திருமலை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான பாரில் கடந்த 21ம் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் அவர் உயிரிழந்தார். அவர் யார், எந்த ஊர் என்று தெரியவில்லை. அவரது உடலை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் அருள்ஜோதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post டாஸ்மாக் கடையில் மயங்கி விழுந்தவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Liquor ,Bar ,Tirumala ,Uyya Kondan, Trichy ,Trichy Government Hospital ,
× RELATED ஆந்திராவில் தேர்தலை முன்னிட்டு 17 டாஸ்மாக் மது கடைகள் மூடல்