×

கணவன் மனைவிக்கு கத்திக்குத்து: கூலி தொழிலாளி கைது

 

கோபி, டிச.29: கோபி அருகே உள்ள சின்ன குறவம்பாளையம் செல்வபுரத்தை சேர்ந்த மூர்த்தி மனைவி வளர்மதி (40). அவர் வண்ணாந்துறை புதூரில் உள்ள அங்கன்வாடி உதவியாளராக வேலை செய்து வருகிறார். மூர்த்தி கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். மூர்த்தியும், வளர்மதியும் வீட்டில் இருந்த போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் கிரிராஜ் (33) என்பவர் வீட்டின் முன்பு இருந்த மூர்த்தியிடம் தகராறு செய்து உள்ளார்.

கிரிராஜ் கூலி வேலை செய்து வருகிறார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த கிரிராஜா கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மூர்த்தியை குத்தி உள்ளார். இதை தடுத்த வளர்மதியையும் கத்தியால் குத்தி உள்ளார். இதில் காயமடைந்த வளர்மதியும், மூர்த்தியும் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து வளர்மதி அளித்த தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த சிறுவலூர் போலீசார் கிரிராஜை கைது செய்து கோபியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கணவன் மனைவிக்கு கத்திக்குத்து: கூலி தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Gopi ,Varamathi ,Chinna Kuravampalayam Selvapuram ,Anganwadi ,Vannandura Putur ,Murthy ,
× RELATED மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு..!!