×

திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகள் டிசம்பர் 31ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு!

நெல்லை: திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகள் டிசம்பர் 31ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண தொகை விநியோகப் பணிகள் நடைபெற்று வருவதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிகையில்; “கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மேற்படி தென்மாவட்டங்களில் நிவாரணத் தொகை விநியோகப் பணியினை மேற்கொள்ளும் பொருட்டு, மேற்படி 4 மாவட்டங்களில் மட்டும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் 31.12.2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்று பணி நாளாகவும், 01.01.2024 (திங்கட் கிழமை) அன்று விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகள் டிசம்பர் 31ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Fair Price Shops ,Tirunelveli, ,Tuthukudi, ,Kumari, ,Tenkasi ,Nella ,Tuthukudi ,Kanyakumari, ,Price ,Districts ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும்...