×

மேல்மலையனூர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

மேல்மலையனூர், டிச. 28: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். மேலும் மார்கழி மாதம் ஏராளமான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவ நிகழ்வுகளில் கலந்துகொண்டு தங்கள் வேண்டுதல் நிறைவேற பொன், வெள்ளி, ரொக்கம் செலுத்தினர். இந்நிலையில் நேற்று உண்டியல் காணிக்கை கோயில் வளாகத்தில் எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.45,99,214, தங்கம் 340 கிராம், வெள்ளி 118 கிராம் இருந்தது. உண்டியல் என்னும் பணியினை கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அறங்காவலர்கள் மற்றும் மேலாளர் மணி உள்ளிட்டவர்கள் மேற்பார்வையிட்டனர். உண்டியல் எண்ணும் பணி கோயில் நிர்வாகம் சார்பில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. மேலும் வளத்தி காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post மேல்மலையனூர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி appeared first on Dinakaran.

Tags : Melmalayanur ,Villupuram District ,Melmalayanur Angalamman Temple ,Melamalayanur ,Dinakaran ,
× RELATED மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில்...