×

2 கோயிலில் உண்டியல் கொள்ளை

சேலம், டிச.27: ஆத்தூர் அருகே 2 கோயிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள சதாசிவபுரத்தில் செல்லியம்மன் கோயில், கருப்பையா கோயில் அருகருக்கே உள்ளது. இந்த கோயிலுக்கு இன்று காலை பக்தர்கள் சென்றபோது, கோயிலில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அதனுள் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.

உடனே ஆத்தூர் ரூரல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.அதில், நள்ளிரவு நேரத்தில் கோயிலுக்கு வந்த மர்மநபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி யாரேனும் சுற்றித்திரிந்தார்களா? என அப்பகுதி மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இத்திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்.

The post 2 கோயிலில் உண்டியல் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Salem ,Attur. Salem… ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை