×

கொடூரத்தின் ஓராண்டு நிறைவு வேங்கைவயல் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது வேதனை: அன்புமணி, டிடிவி அறிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட அருவருக்கத்தக்க நிகழ்வு நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டது. குற்றவியல் விசாரணையில் ஓராண்டு என்பது மிக நீண்ட காலம். ஆனால், இவ்வளவு காலம் கடந்தும் கூட வேங்கைவயல் கொடூரத்திற்கு காரணமானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.

வேங்கைவயல் குற்றவாளிகள் தண்டிக்கப்படாததன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதே போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இதே நிலை தொடரக்கூடாது. இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளார் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்து ஓராண்டாகியும் தற்போது வரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

எனவே, வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி வேங்கைவயல் கொடுஞ்செயலுக்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்.

The post கொடூரத்தின் ஓராண்டு நிறைவு வேங்கைவயல் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது வேதனை: அன்புமணி, டிடிவி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Venkai Valley ,Anbumani ,TTV ,CHENNAI ,BAMA ,Pudukottai ,Venkaiwayal ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...