×

கண்மாயில் மூழ்கி தாய், மகள் சாவு

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அழகமடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் (45). இவரது மனைவி ராஜேஸ்வரி (40). இவர்களுக்கு மகள் ஹன்சினி (12), ஆறு வயதில் மகன் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகின்றனர். தற்போது விடுமுறைக்காக, ராஜாராம் குடும்பத்துடன் இரண்டு நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று காலையில் ராஜாராமின் மனைவி ராஜேஸ்வரி, மகள் ஹன்சினி இருவரும் வீட்டின் அருகேயுள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். கண்மாயில் தாயுடன் குளித்துக் கொண்டிருந்த ஹன்சினி திடீரென நீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளார். மகளை காப்பாற்றுவதற்காக தாய் ராஜேஸ்வரி கண்மாயின் ஆழமான பகுதிக்கு சென்றபோது தாயும், மகளும் அடுத்தடுத்து நீரில் மூழ்கியதால் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.

The post கண்மாயில் மூழ்கி தாய், மகள் சாவு appeared first on Dinakaran.

Tags : Kanmai ,Thiruvadanai ,Alagamadai ,Ramanathapuram district ,Rajeshwari ,
× RELATED ஏடிஎம் மையத்தின் முன்பு கழிவுநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி