×

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆதிரெங்கம் ரெங்கநாத பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

 

திருத்துறைப்பூண்டி, டிச. 24: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆதிரெங்கம் ரெங்கநாத பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி வரதராஜபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து விழா நிறைவுபெற்றது. நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5.30 மணியளவில் வரதராஜபெருமாள் பூமகள், திருமகளுடன் சொர்க்க வாசல் திறந்து எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிங்காரவடிவேலு, ஆய்வாளர் ராஜேந்திர பிரசன்னா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். இதேபோல திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம். ரெங்கநாத பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பூமிதேவி, ஸ்ரீதேவி உடனுறை அரங்கநாத பெருமாள் சொர்க்கவாசல் திறந்து ஆழ்வாராதிகள், தேசிகர் மற்றும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் தக்கார் அசோக் குமார், செயல் அலுவலர் முருகையன் உள்ளிட்டோர் கலந்து கலந்துகொண்டனர்.

The post வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆதிரெங்கம் ரெங்கநாத பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Vaikunda Ekadasi ,Heaven's Gate ,Adirengam Renganatha Perumal Temple ,Thirutharapoondi ,Thiruthurapoondi ,Heaven Gate ,Adirengam Renkanatha Perumal Temple ,
× RELATED ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று...