×

மாநில அளவிலான கலைத்திருவிழா சேடபட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

மதுரை, டிச. 24: மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் பொம்மலாட்டம் மற்றும் பாவனை நடிப்பு பிரிவுகளின் இறுதிப்போட்டி திருச்சியில் நடைபெற்றது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொம்மலாட்டம் குழு போட்டியில் சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ராஜலட்சுமி, அஷ்டலட்சுமி, கற்பகலட்சுமி, லத்திகா தேவி, பீமாசெல்வி ஆகியோர் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தனர். பொம்மலாட்டம் தனிப்பிரிவு போட்டியில் ராஜலட்சுமி மாநில அளவில் மூன்றாம் இடமும், பாவனை நடிப்பு தனிப்பிரிவு போட்டியில் கோசின் மாநில அளவில் மூன்றாம் இடமும் பெற்றனர்.

இதன்படி, கலைத் திருவிழாவில் மாநில அளவிலான போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்ற மாவட்டத்தின் ஒரே பள்ளி என்ற சாதனையும் கிடைத்துள்ளது. சாதனை படைத்த மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வேல், பயிற்சியாளர் பட்டதாரி ஆசிரியர் சிவா மற்றும் அனைத்து ஆசிரியர்களையும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், சேடபட்டி அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

The post மாநில அளவிலான கலைத்திருவிழா சேடபட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Sedapatti Govt School ,State Level Arts Festival ,Madurai ,Trichy.… ,Sedapatti government ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை