×

டூவீலர்கள் மோதி வியாபாரி பலி

சேந்தமங்கலம், டிச.24: திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த சிறுநாவலூரைச் சேர்ந்தவர் ராஜா(40). இவர் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து கொண்டு, நாமக்கல் கணேசபுரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜா மேட்டுப்பட்டி ஜம்புமடை ரோடு அருகே, தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு டூவீலர், எதிர்பாராத விதமாக ராஜாவின் டூவீலர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர்கள் மோதி வியாபாரி பலி appeared first on Dinakaran.

Tags : Trader ,Senthamangalam ,Raja ,Sirunavalur ,Thariyaur ,Trichy district ,Namakkal ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை