×

நீட் பயிற்சி மையத்தில் மாணவர் தீக்குளிப்பு

சூலூர்: ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரின் மகன் ஆகாஸ் ஸ்ரீ (19). 12ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்காக கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூரில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் தங்கி படித்து வந்தார். அங்கு கடந்த 2 வாரங்களாக பயிற்சி தேர்வு நடந்து வந்தது. இந்த தேர்வில் ஆகாஸ் ஸ்ரீ குறைந்த மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் நீட் பயிற்சி மையத்தின் விடுதியில் பெட்ரோலை உடலில் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயமடைந்த அவருக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post நீட் பயிற்சி மையத்தில் மாணவர் தீக்குளிப்பு appeared first on Dinakaran.

Tags : NEET ,Sulur ,Matheswaran ,Bhawani ,Erode district ,Agas Sri ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வில் முறைகேடு : நாடு முழுவதும் 50 பேர் கைது