ஈரோடு, டிச. 23: பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் 15 ஆயிரத்து 743 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், நாளை 25ம் தேதி முதல் ஏப்ரல் 23ம் தேதி வரையிலான காலத்தில் முதல் 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதமும், அடுத்த 60 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 450கனஅடி வீதமும் மற்றும் மீதமுள்ள 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதமும் மொத்தம் 120 நாட்களுக்கு இரண்டாம் பருவ பாசனத்திற்கு 4017 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
The post காலிங்கராயன் பாசனத்திற்கு நாளை மறுநாள் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.