×

ஈரோடு தீயணைப்பு வீரர்கள் 11 பேர் வாகனத்துடன் அனுப்பி வைப்பு

ஈரோடு, டிச.19: தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடர் மீட்பு பணிக்கு ஈரோடு தீயணைப்பு வீரர்கள் 11 பேர் வாகனத்துடன் அனுப்பி வைக்கப்பட்டனர். தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், தென் மாவட்டங்களில் பொதுமக்கள் வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றனர். இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடர் மீட்பு பணிக்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து தீயணைப்பு துறையினரை அழைத்துள்ளனர். இதன்பேரில், ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பில் ஒரு தீயணைப்பு வாகனத்துடன் 11 தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர். மழை நீர் முழுமையாக வடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை தீயணைப்பு வீரர்கள், தூத்துக்குடியில் பணியாற்றுவர் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

The post ஈரோடு தீயணைப்பு வீரர்கள் 11 பேர் வாகனத்துடன் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Tuticorin district.… ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்