×

திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டுக்கான ஆலோசனை கூட்டத்தில் சீருடை வழங்கினார் எம்எல்ஏ

ஆவடி: பட்டாபிராமில் திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகிகள் 2,500 பேருக்கும் சீருடைகள் பிரித்து சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார். திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறுவதையொட்டி, திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞர் ஆணி ஆலோசனை கூட்டம், பட்டாபிராம் ஜெய் கிரீஸ் திருமண மண்டபத்தில் நடந்தது. திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில மாநாடு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதில், குறிப்பாக வருகின்ற சனிக்கிழமை சேலத்திற்கு செல்ல மேற்கொள்ளவேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், இளைஞர் அணியினர் பங்கேற்கும் முறைகள் குறித்தும், விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், கூடுதலாக ஆவடியில் இருந்து சேலத்திற்கு செல்ல ரயில் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சா.மு.நாசர் எம்எல்ஏ பேசுகையில், நடைபெற உள்ள மாநாட்டிற்கு இளைஞர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும், மாநாடு வெற்றிபெற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினார். இதனை தொடர்ந்து மாநாட்டிற்கு அணிந்து வரவேண்டிய 2,500 சீருடைகள் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, வட்ட, நகர, பகுதி திமுக செயலாளர்களிடம் பிரித்து ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜே.ரமேஷ், மாநில இளைஞர் அணி துணை செயளாலர்கள் அப்துல் மாலிக், பிரபு கஜேந்திரன், மாநில மாணவர் அணி இணை செயளாலர் சி.ஜெரால்டு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் துர்காபிரசாத், ஆவடி மாநகர செயலாளர் சன் பிரகாஷ் பகுதி செயலாளர்கள் பேபி சேகர், நாராயணபிரசாத், பொன் விஜயன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர மாநகர பகுதி மற்றும் பேரூர் திமுன செயலாளர்கள், இளைஞர் அணி மாவட்ட மற்றும் மாநகர துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

The post திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டுக்கான ஆலோசனை கூட்டத்தில் சீருடை வழங்கினார் எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : MLA ,DMK ,youth team ,state conference ,Aavadi ,DMK youth team ,Pattabiram ,
× RELATED திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் யானை...