- சட்டமன்ற உறுப்பினர்
- திருவூர் ஊராட்சி
- திருவள்ளூர்
- திருவூர் பஞ்சாயத்
- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
- குடியிருப்பு ராம் நகர்
- தின மலர்
திருவள்ளூர்: திருவூர் ஊராட்சி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ராம் நகரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடையை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ திறந்து வைத்தார்.
பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் ஒன்றியம், திருவூர் ஊராட்சி, ராம் நகரில் 1200 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். திருவூர் மற்றும் ராம்நகர் ஆகிய பகுதிகளில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த ரேஷன் கடை ஒரே இடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமிதேர்தல் வாக்குறுதியில் ஒரே இடத்தில் அரசு சார்பில் ரேஷன் கடை கட்டித்தரப்படும் என உறுதி அளித்திருந்தார்.
அதன்படி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ராம் நகரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சண்முகவள்ளி, ஒன்றிய சேர்மேன் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த், துணை சேர்மேன் பர்கத்துல்லா கான், ஒன்றிய கவுன்சிலர் திலீப்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவிற்கு பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) மாணிக்கம், மண்டல துணை வட்டாட்சியர் லதா, மாவட்ட கவுன்சிலர் இந்திரா குணசேகர், ஊராட்சி துணைத் தலைவர் கிரி, கிராம நிர்வாக அலுவலர் சூர்யா, நிர்வாகிகள் சுபாஷ் சந்திரபோஸ், அன்புநாதன், தாமரை செல்வன், தனஞ்செழியன், சசிகுமார், மகேஷ், ரொமாரியோ, விஜயகுமார், செல்வராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திருவூர் ஊராட்சியில் ரூ.12.30 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.