×

தண்ணீர் லாரி மோதியதில் மருத்துவமனை ஊழியர் பலி

பூந்தமல்லி: சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன்(55), போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து மவுண்ட் – பூந்தமல்லி சாலை, அய்யப்பன்தாங்கல் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி வெங்கட்ராமன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தகுறித்து தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கட்ராமன் சடலத்தை மீட்டு போரூர் தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் ரகு(45), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தண்ணீர் லாரி மோதியதில் மருத்துவமனை ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Venkatraman ,Perumal Kovil Street ,Ayyappanthangal, Borur, Chennai ,Borur ,Ayyappanthangal, Mount - Poontamalli road ,Dinakaran ,
× RELATED மருத்துவரின் அறிவுரையை மீறி மது குடித்தவர் பலி