- சோழகம்பட்டி
- ரயில் நிலையம்
- மார்க்சிஸ்ட் கம்யூன்
- திருக்காட்டுப்பள்ளி
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- நிலையம்
- சோழகம்பட்டி ரயில் நிலையம்
- தின மலர்
திருக்காட்டுப்பள்ளி, டிச.17: சோழகம்பட்டி ரயில் நிலையம் அருகில் நடைபாதை பணியை தடுப்பதாக கூறி ரயில்வேயை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அநறஙறு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் சோழகம் பட்டி ரயில்வே நிலையம் அருகில் நடைபாதை பணியை தடுக்கும் ரயில்வே துறையை கண்டித்து பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் உதயகுமார் தலைமை வகித்தார்.
சோழகம்பட்டி முத்துசாமி, இந்தளூர் மயில்சாமி, ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் அசோக்குமார் (கடம்பங்குடி), முத்துசாமி (மாரநேரி) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பக்கிரிசாமி, கண்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வழக்குரைஞர் .ஜீவகுமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் காந்தி, கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், பாஸ்கர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
The post சோழகம்பட்டி ரயில்நிலையம் முன் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.