×

மரத்தில் டூவீலர் மோதி தனியார் கம்பெனி ஊழியர் பலி

தர்மபுரி, டிச.17: பாலக்கோடு கொண்டசாமனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் செல்வம், பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் பெங்களூரில் இருந்து பாலக்கோடு வந்த செல்வம் பின்னர் அங்குள்ள ஸ்டேண்டில் நிறுத்தியிருந்த தனது டூவீலரில் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பாலக்கோடு சிப்காரனஅள்ளி சாலையில் பூச்சிக்கொட்டாய் என்ற பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் டூவீலர் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post மரத்தில் டூவீலர் மோதி தனியார் கம்பெனி ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Rajamanickam ,Kondasamanaalli ,Palakod ,Selvam ,Bengaluru ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்