×

தக்கலை அருகே மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

 

குமாரபுரம், டிச. 16: தக்கலை அருகே பூக்கடை நங்கச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (61). கூலி தொழிலாளி. நேற்று காலை டீ குடிப்பதற்காக வீட்டில் இருந்து கோழிப்போர்விளைக்கு வந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ராஜமணியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது மகன் ஜஜின் தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தக்கலை அருகே மயங்கி விழுந்த தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Takalai ,Kumarapuram ,Rajamani ,Angachivila ,Dhakala ,Dinakaran ,
× RELATED குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி