×

புகையிலை பொருட்கள் விற்ற 3 வியாபாரிகள் அதிரடி கைது: பணம் பறிமுதல்

 

புதுச்சேரி, டிச. 16: பாகூர், மடுகரையில் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்ற 3 வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த பணம் அதிரடியாக கைப்பற்றப்பட்டன. புதுச்சேரி, மடுகரை அடுத்த ஒரு பார் அருகிலுள்ள ஸ்டோரில் தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நெட்டப்பாக்கம் ேபாலீசார், அங்கு நேற்று முன்தினம் திடீரென சோதனையிட்டனர். அப்போது பள்ளி அருகில் குட்கா போன்ற பான் மசாலா பொருட்களை விற்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த 15 கிலோ மதிப்பிலான பான்மசாலா மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் வியாபாரி சிவராமனை (41) கைது செய்தனர். இதேபோல் பாகூர் அடுத்த கரையாம்புத்தூரில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளரான ஜெயக்குமார் (63) மீது வழக்குபதிந்த பாகூர் எஸ்ஐ தமிழரசன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.

அவரது கடையில் இருந்த 40 கிலோ பான் மசாலா, குட்கா பொருட்கள் மட்டுமின்றி ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கரையாம்புத்தூர் சந்திப்பில் மளிகை கடை வைத்துள்ள அய்யப்பன் (50) என்பவரது கடையிலும் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்தும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பான்மசாலா பொருட்களை கைப்பற்றினர்.

The post புகையிலை பொருட்கள் விற்ற 3 வியாபாரிகள் அதிரடி கைது: பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Panmasala ,Gutka ,Bagur ,Madugara ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு